சென்னை

த்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அதிமுக பலிகடா ஆகும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

இன்று சென்னையில் நடந்த திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

முதல்வர் தனது உரையில்

”பாஜக அரசு இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களைப் பார்த்துப் பயந்து போய் நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளது. சிலருக்கு திமுக குடும்பமாகச் செயல்படுவது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

பாஜகவினர் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள். தாம் அதிபராக வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் மோடி இவ்வாறு செயல்படுகிறார். இதே அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்துவிட்டு தற்போது ஆதரிக்கிறார்கள். மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக ‘பலி கடா’ ஆகும், என்பதைப் புரியாமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பாஜகவுக்கு இந்தியா கூட்டணி என்றாலே அச்சம் வந்துவிடுகிறது. நமக்கு இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்காகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

நீங்க்ள் தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ, இல்லையோ கொள்ளையடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை சட்டசபையில் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் காத்திருப்பீர்களா?.

தி மு கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம் என்பது தான் அண்ணா கண்ட திமுக.  எனக்கு யார் காலிலும் விழுந்து பதவி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்கள் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தைக் காப்பாற்றியது போல, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.”

என்று கூறினார்