ருமபுரி

ருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடுமபத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ. 4 லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளார்.

தனியாருக்குச் சொந்தமான ஒரு பட்டாசு ஆலை தர்மபுரி மாவட்டம், வெதரம்பட்டியில் இயங்கி வந்தது. நேற்று இந்த பட்டாசு தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராத விதமாக திடீரென பட்டாசுக்கள் வெடிக்கத் தொடங்கி வெடி விபத்தால் தீ அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. விபத்தில்தில் அங்கு வேலை செய்த 3 பெண்கள் வெடி விபத்தில் சிக்கி பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 24.02.2025 பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமம், பூமிசமுத்திரத்தைச் சேர்ந்த மலர் (வயது 38) க/பெ. விஜயகுமார், செண்பகம் (வயது 35) க/பெ.மேகநாதன் மற்றும் மஞ்சு (வயது 33) க/பெ. தியாகு ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”

என்று தெரிவித்துள்ளார்.