பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பாவ்னி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு , சுருதி , மதுமிதா என பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு பேர் வெளியேறினர்.

இன்று ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க்’ தொடர்கிறது. அபினய் சிபியின் கண்ணாடியாகவும், இமான் ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு பிரியங்காவின் கண்ணாடியாகவும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது. இதில் ராஜுவுக்கும், பாவனிக்கும் கருத்து வேற்றுமை ஏற்படுகிறது.

இதில் பிரியங்கா குறித்த கருத்துக்களை ராஜு கூறுகிறார். அப்போது, பாவ்னி உங்களை ஏத்தி விடுகிறார், நீங்கள் அமைதியாக இருங்கள் என ராஜு கூறுகிறார்.

நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என என்னிடம் தெளிவாக கூறுங்கள் என ராஜுவிடம், பாவ்னி கூறுகிறார். மேலும் நீங்கள் மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை திணிப்பதாகவும் கூறுகிறார். விருது வழங்கும் டாஸ்கின் போது கூட அனைவர் குறித்தும் நல்ல விதமாக கூறுகிறீர்கள், ஆனால் என்னை பற்றி மட்டும் குறை கூறுகிறீர்கள் என்றும் பாவ்னி கூறுகிறார். அதற்கு ராஜு, உன்னிடம் ஜாலியாக பேசுவதே தப்பு, இதற்கு தான் நான் உங்களை விட்டு தூரமாக இருக்கிறேன் என்கிறார். அதற்கு பாவ்னி டேய்… போடா டேய் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோ என பாவ்னி கூறும் காட்சிகள் உள்ளது.

முன்றாவது ப்ரோமோவில் பிரியங்காவை நன்றாக கலாய்த்து விடுகிறார் ராஜு .