சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், எடப்பாடி ஆதரவாளர்கள் 22 பேர் மீது ஓபிஎஸ் ஆதரவாளரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி- பன்னீர்செல்வம் தரப்பு இடையே நேற்று நடந்த மோதலில் 2 போலீசார் உட்பட 42 பேர் காயமடைந்தனர். பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீது ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து,  ஓபிஎஸ் ஆதரவாளர்  சைதை பாபு அளித்த புகாரில்  பேரில் அவர்கள்மீத போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோதமான ஆயுதங்களுடன் கூடுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவில் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.