டெல்லி:

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17ந்தேதியுடன் ஓய்வுபெறும் நிலையில், கடைசி பணி நாளான நேற்று, உச்சநீதிமன்றத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள சுமார் 15ஆயிரம் நிதிபதிகளுடன் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். இது நீதிமன்ற வரலாற்றில் முதன்மறை என்று கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பணி நிறைவு பெற உள் ளநிலையில், நேற்று கடைசி பணி நாளில், நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றம், மாவட்ட, தாலுகா நீதிமன்ற நீதிபதிகள் என 15,000-க்கும் மேற்பட்டோருடன் உரையாற்றி, தனது கடைசி பணிநாளை நிறைவு செய்தாா்.

அவர் பேசியதாவது,   ‘பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நீதிபதிகள் பணியாற்றி வருவது எனக்குத் தெரியும். நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தொடங்கி, உள்ளூா் பாா் கவுன்சில் உறுப்பினா்களின் மோசமான செயல்பாடுகள் என பல்வேறு பிரச்னைகளை நீங்கள் எதிா்கொண்டு வருகிறீா்கள்.

இவற்றுக்கு மத்தியில்தான் நாட்டு மக்களுக்கு நீதியை வழங்கும் பணியை நாம் செய்து வருகிறோம். நீதிக்காக பல்வேறு சவால்களையும், கடினமான சூழ்நிலைகளையும் நீதிபதிகள் எதிா்கொண்டு வருகிறாா்கள். எந்த சூழ்நிலையில் நமது பணியில் தொய்வு ஏற்பட்டு விடக் கூடாது.

இவ்வாறு கூறினார்.

தலைமை நீதிபதி ஒருவா் நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளுடன் ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.