டெல்லி:

வெளிநாட்டு கரன்சிகளை வேர்க்கடலை மற்றும், பிஸ்கட்டு பாக்கெட்டுகளில் வைத்து டத்தி வந்ததாக ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வெளிநாட்டில் இருந்து டெல்லி வந்த முரட் ஆலம் என்ற பயணி ஒருவரை சோதனையிட்ட அதிகாரிகள் அவர் கிலோ கணக்கில் பச்சை வேர்க்கடலை மற்றும், இங்கே விற்பனையாகும் சாதாரண பிஸ்கட்டு பாக்கெட்டுகளை எடுத்து வந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வேர்க் கடலை மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து சோதனை செய்தபோது, அதிர்ச்சி அடைந்தனர்.

சாதாரண வேர்கடலையை உடைத்து அதற்குள் வெளிநாட்டு கரன்சியை சுருட்டு மடக்கி வைத்து, மீண்டும் ஒரிஜினல் வேர்கடலை போன்றே ஒட்டி வைத்துள்ளனர். அதுபோல, பிஸ்கட்டு பாக்கெட்டுகளில் உள்ள பிஸ்கட்டுகளின் நடுவில் துளையிட்டு, அதில் கரன்சிகளை சுருட்டி வைத்து, மீண்டும் ஒரிஜினல் பிஸ்கட்டு பாக்கெட்டு போலேவே ஒட்டியிருந்தது தெரிய வந்தது.

இந்த நூதன கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட கரன்சிகளின்  மதிப்பு ரூ.45 லட்சம் என்று தெரிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.