மார்த்தாண்டன்துறை

ல லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனலைன் விளையாட்டில் பணத்தை இழந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறையை சேர்ந்தவர் தேவதாசன்.  இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி திரைப்பட ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து, கடன் ஏற்பட்டதால், நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார்.

பிறகு மனைவி ஊரான பூத்துறை கோயில் வளாகத்தில் வந்து தங்கியிருந்தார்.  நேற்று முன்தினம் மாலை மார்த்தாண்டன்துறைக்கு சென்றவர் பெற்றோரிடம் பணத்தையும், சொத்தையும் இழந்தது குறித்து கூறி அழுது இரவு 11.15 மணியளவில் வீட்டு மாடிக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டார்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் தேவதாசன் கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் கதவை உடைத்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், தேவதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.