chris_gayle__large
பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக மீண்டும் விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்   பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெய்ல்.
ஏற்கெனவே  ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் டி20 தொடரின்போது, பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் பேசி கெய்ல் சர்ச்சையில் சிக்கினார். இதனால், மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, கெய்ல் உடனான ஒப்பந்தத்தை நீடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், பிரிட்டன் நாளிதழான ‘தி டைம்ஸ்’ பத்திரிகையின் பெண் செய்தியாளர் சார்லோட்டே எட்வர்ட்ஸ்-சிடம் சர்ச்சையான முறையில் கெய்ல் பேசியதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, வீரர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்வது அவசியம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருப்பதாகவும் இந்த சம்பவங்கள் குறித்து  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்கப்படும்  என்றும் சுக்லா கூறியுள்ளார்.