மீபத்தில் திரைப்பட படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க தெலுங்கானா மற்றும் ஆந்திர அரசு அனுமதி அளித்தது. இட்தையடுத்து, மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி மருமகனும், நடிகருமான கல்யாண் தேவ் முதல் நபராக தான் நடிக்கும் ’சூப்பர் மச்சி’ படப்பிடிப்பு பணிகளை தொடங்கினர்.
சூப்பர் மச்சியின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிய சில தினங்களுக்கு பிறகு கல்யாண் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான கோவிட் -19 சோதனையை மேற்கொண் டார்.
இது குறித்து கல்யாண் “நான் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே தனிமையில் இருந்தேன், கோவிட் பரிசோதனை செய்துகொண்டு முடிவுக்காக காத்தி ருந்தேன் அதில் தொற்று இல்லை என தெரிந்தது. என் மீது அக்கறை கொண்டி ருந்த விசாரித்த அனைவருக்கும் நன்றி. எனது குடும்பத்தினரை மீண்டும் கட்டிப்பிடிக்க நான் காத்திருக்கிறேன்.
தன்னை தனிமைபடுத்தி கொரோனா தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்ததும் மீண்டும் மனைவி சிரிஜா. குழந்தையுடன் இணைந்தார். அனைவரும் கட்டிப்பிடித்த படி எடுத்த செல்பி படத்தைபகிர்ந்தார்.

’வரும்முன் காப்போம் என்பதற் கிணங்க நோய் வருவதற்கு முனப்பாகவே தனிமைபடுத்திக்கொண்டு முன்னெசரிக் கையாக இருந்தேன்’ குறிப்பிட்டுள்ளார். ,
சூப்பர் மச்சி என்பது கல்யாண் தேவ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம். கடந்த அக்டோபர் 2019 அன்று, நடிகர் படத்தை அறிவித்து, சூப்பர் மச்சியின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியிட்டார்.
சூப்பர் மச்சி ஒரு காதல் கதையாக உருவாகிறது. இதில் ரச்சிதா ராம் ஹீரோயின். ராஜேந்திர பிரசாத், நரேஷ், போசானி முரளி கிருஷ்ணா மற்றும் பிரகதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புலி வாசு இயக்குகிறார். எஸ் தமன் இசை அமைக்கிறார்.