கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆச்சாரியா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி.

இதனிடையே, ‘ஆச்சாரியா’ படத்துக்குப் பிறகு சிரஞ்சீவிஎன்ன படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரின் ஆர்வமாக உள்ளது .
‘லூசிஃபர்’ மற்றும் ‘வேதாளம்’ படங்களின் தெலுங்கு ரீமேக்கை உரிமையை சிரஞ்சீவி நடிப்பதற்காக வாங்கி வைத்துள்ளனர்.

இதனிடையே ‘வேதாளம்’ ரீமேக் பணிகள்தீவிரமாகி உள்ளதால், ‘லூசிஃபர்’ ரீமேக் பணிகளைத் தள்ளிவைத்துவிட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி சிரஞ்சீவி பிறந்த நாளன்று ‘வேதாளம்’ ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியாகவுள்ளது. அந்தப் படத்தை முடித்துவிட்டே ‘லூசிஃபர்’ ரீமேக் பணிகளை சிரஞ்சீவி துவங்குவார் எனத் தெரிகிறது.