இந்தியாவின் ஒரு பகுதியான சிக்கிமை இந்தியாவில் இருந்து பிரிக்க சீனா பகிரங்க சாவால் விடுத்துள்ளது.

இந்தியா-பூடான்-சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகள் இணையும் இடத்தில் இந்திய மற்றும் பூடான் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இந்தப் பகுதிக்குள்  சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் பெரும் ஆத்திரமடைந்த சீனா பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுகிறது.

பூடான் பகுதியில் இருந்து இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றும் சீனா கூறி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

ஆகவே இந்தியா – சீனா இடையே  ( சிக்கிம் செக்டாரில்) டும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், “இந்தியாவிடமிருந்து சிக்கிம் மாநிலத்தை தனி நாடாக்குவோம்” என்று சீன அரசின்  மீடியா குளோபல் டைம்ஸ் என்கிற இதழ் வெளிப்படையாகவே எழுதி வருகிறது.

இந்த இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:

“இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம்.

சிக்கிம் மாநில விடுதலைக்காக போராட சீன மக்கள் தயாராக வேண்டும்.

2003-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் போது சிக்கிம் மாநிலத்ததை இந்தியாவின் ஒரு மாநிலமாக எற்றுக் கொண்டந்தை சீன மறு பரிசீலனை செய்யும். சிக்கிம் பகுதியில் தனிநாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர்.

சுதந்திர சிக்கிம்
உருவாக வேண்டும் என்பதற்கு சீன மக்களிடையே பெரும் ஆதரவு உள்ளது” என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பூடான் நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான இயக்கங்கள் காணப்படுகின்றன. விரைவில் தெற்கு இமாலய பகுதியில் புதிய எல்லைகள் வகுக்கப்படும் என்றும் அந்த இதழ் எழுதியிருக்கிறது.

குளோபல் டைம்ஸ்,  சீன அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள இதழ். ஆகவே இதில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் அந்நாட்டு அரசின் கருத்துக்களாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூடான் மற்றும் சிக்கிமில் இந்தியாவிற்கு எதிரான இயக்கங்கள் காணப்படும். இந்தியாவிற்கு இது எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தும். தெற்கு இமாலைய புவிசார் அரசியலை மாற்றி எழுதும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.