சென்னை:
பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்றும், அவரது வழியில் முதல்வர் ஸ்டாலின் பெண்களின் நலனுக்கான செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.