சென்னை: 
டகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின நாளை தலைமைச் செயலகத்திலிருந்தபடி மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை 10 மணிக்குக் காணொலி  வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், அரசுத்துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.