ராமேஸ்வரம்:  மீனவர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள ராமேஸ்வரம் வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு,  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக  நேற்று வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவ மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்ததார். இதைத்தொடர்ந்து, இன்று அங்கு நடைபெற உள்ள அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையடுத்து,  அங்கு இன்று நடைபெற உள்ள  மீனவர் நல மாநாட்டிலும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இதனிடையே,  ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் உடன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ச்சியாக இன்று காலை 11 மணியளவில் மீனவர்கள் சங்க மாநாட்டில் பங்கேற்று மீனவர்களுக்கான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுகிறார்.