சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலி6ன் இன்று 4 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்து கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்  பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்த வருகிறார். நேற்று நேற்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் அருகே ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில்,  இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.   இன்று செங்கல்பட்டில் மறைமலைநகரில், களஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது

முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.