சென்னை: நீர்வளத்துறை பயன்பாட்டிற்காக 41 புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  நீர்வளத்துறை பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீர்வளத்துறையின் உதவி செயற் பொறியாளர்களுக்கு ரூ.3.70 கோடி மதிப்பில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 41 வாகனங்களை வழங்கும் விதமாக 7வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.