சென்னை: மடுவன்கரை மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

தமிழகத்தில் இன்றுமுதல் 1 முதல் 8-ம் வகுப்புக்கு இன்று பள்ளி திறக்கப்பட்டுள்ளது. சுமார் 19 மாதங்களுக்கு பிறகுகொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதுடன், மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை  சென்னை, மடுவன்கரையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கு 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து  வரவேற்றார்.