சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணியின்போது உடல்சோர்வு ஏற்பட்டதால், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்க சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிந்த பின் சிறிது நேரத்தில் முதல்வர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.