சென்னை: விவசாயிகளுக்கு 50 ஆயிரமாவது இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தநிகழ்வின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50000 விவசாய பயனாளர்களில் 50000 வது பயனாளி உள்பட 5 நபர்களுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கினார்,

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக் கான ஆணையாய் வழங்கினார்.  ஏற்கனவே  அரவக்குறிச்சியில் நவம்பர் 11-ஆம் தேதி 50 ஆயிரமாவது  விவசாயிக்கு இலவச மின் இணைப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், இன்று 50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை  வழங்கப்பட்டுள்ளது.