சென்னை: தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார் .

திராவிட கழக தலைவர் கி.வீரமணிகயின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் உடனிருந்தனர்.‘

திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துக் குறிப்பில், ‘சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு – இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன்.

திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் – வழிகாட்டியாய் அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.’ என வாழ்த்தியுள்ளார்.