சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கல்லூரி பருவம்தொட்டே அரசியல்களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொதுவுடைமைப் போராளியான அவரது தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.