சென்னை:
டல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரான அவ்வை நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார்.

இவர் 1992ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்துள்ளார். மேலும் செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நெருங்கி நண்பரும் ஆவார்.