சென்னை: அரபிக்கடலில் உருவாகும் புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மக்களுக்கு வெதர்மேன் தகவல் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தபோது, பெய்த கனமழை மற்றும் சூறாவளியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப் போட்டு சென்றது.
இந்த நிலையில் தற்போது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்த சூழலில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யலாம், ஆனால் இதனால் சென்னைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-