சென்னை:
த்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக இரண்டு சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையே சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியை அரசு கையகப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆசிரியர் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.

அதில் பத்ம சேஷாத்ரி பள்ளி மீது பாலியல் மட்டுமல்லாது வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்து வருவதாகவும், இது குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, பாலியல் விவகாரத்தில், ஆசிரியர், பள்ளி நிர்வாகி உட்பட 5 பேருக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.

இதையடுத்து பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்த மாணவிகளின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.