சென்னை,

சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என்றும், அவர்மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு இன்று அதிரடியாக அவரது குண்டர் சட்டத்தை கைது செய்து உத்தரவிட்டுள்ளது.

‘புதுக்கோட்டை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது’ என பொதுமக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதையடுத்து புதுக்கோட்டை யில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு ஜூலை 12-ம் தேதியன்று சேலம் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்மீது காவல்துறை குண்டாஸ் சட்டத்தை பாய்ச்சியது. இதற்கான உத்தரவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் பிறப்பித்தார்.

இதைதொடர்ந்து வளர்மதி  சேலம் மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வளர்மதியின் தந்தை மாதையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனுவைத் தாக்கல் செய்தார்.

அப்போது,  அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு வழங்கப்பட்ட பேச்சுரிமையின்படி அவர் இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார்; அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எந்த முகாந்திர மும் இல்லை’ என வளர்மதியின் தந்தை தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், வளர்மதியை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்’ என்றும் மாதையன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு  நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அமர்வில் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற விசாரணயின்போது, வளர்மதி குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ‘சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவி மீதான குண்டர் சட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்மீது சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், தன்மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி  கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  சேலம் மாணவி வளர்மதி சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.