சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வைகாசி அதற்கான கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையில், பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடுக்க திக உள்பட சில அமைப்புகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு காவல்துறை  பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, ராஜப்பிரகாசம் என்பவர் bசன்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதை விசாரித்த நீதி மன்றம்,  பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி ஆதீனம் சார்பில் அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும்,  மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.