சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அறக்கட்டளைக்குத் தானமாக அளிக்கப்பட்ட சொத்துக்களைத் தனி நபர்களுக்கு மாற்ற முடியாது என உத்தரவிட்டுள்ளது.

கே எம் சாமி என்பவர் தன்னுடைய சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதால், சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் திருப்போரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களைக் கண்டறிந்து, 4 வாரங்களில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் நடவடிக்கையை முடிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துகளிலிருந்து ஈட்டப்படும் வருமானத்தை, எந்த நோக்கத்திற்கான அறக்கட்டளை துவங்கப்பட்டதோ, அதற்காக செலவிட வேண்டும் என்றும் கூறி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.