சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அமைச்சர்கள் பெருகருப்பன் மற்றும் எஸ் எஸ் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தவிர கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் செய்ததாக, அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் பெரியகருப்பன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.