சென்னை

மிழக அரசு நியமித்துள்ள தற்காலிக பணியாலர்களை நீக்க வேண்டும்  என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(c)PragMatrix

கடந்த 1997 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியில் சேர்ந்த சத்யா பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் இந்த வாழ்கை விசாரித்து12 வாரத்தில் பணி வரன்முறை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து கோர்ட்டு, தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன். ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறையின் கூடுதல் செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையில் தற்காலிக பணியாளர்கள் நியமனங்களை கைவிடுவதாக 2020-ம் ஆண்டு 28ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது,  நீதிபதிகள்  இதனை பதிவு செய்து அமர்வு, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக பணியாளர்களும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு யாரேனும் நியமிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.