ramடீ கே செஸ் பயிற்சி மையம் மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய தமிழ்நாடு மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் மொத்தம் 430 பேர் பங்கேற்றனர். போட்டியின் நடுவராக சர்வதேச நடுவர் ஆனந்தராம் நியமிக்கபட்டு 9 பிரிவுகளாக போட்டிகளை நடத்தினர்.

சென்னையை சேர்ந்த இளைஞர் ராம் எஸ்.கிருஷ்ணன் 8.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் பி.ராஜசேகரன் இரண்டாம் இடத்தையும், மதுரையை சேர்ந்த செல்வமுருகன் மூன்றாம் இடத்தையும், தூத்துக்குடியை சேர்ந்த சின்னத்துரை நான்காம் இடத்தையும், திருநெல்வேலியை சேர்ந்த  சிவசுப்பிரமணியன் மனோஜ் ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்.

தூத்துக்குடி காமாட்சி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை மீனாகுமாரி மற்றும் மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் ரங்கராஜன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.