சென்னை: சென்னையில் மின்சார ரயில் சேவைகள், நாளை (தமிழ் வருடப்பிறப்பு)  ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில்  இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி – சூலூர்ப்பேட்டை, சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-செங்கல்பட்டு/திருமால்பூர் பிரிவுகள் இடையே ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் 449 மின்சார ரெயில் சேவைகளே அன்று இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.