உணவகத்தில் கேட்பாரற்று கிடந்த 25 லட்சம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த உணவக ஊழியரை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்

சென்னை  அண்ணா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட வந்தவர்கள்  25 லட்சம் ரூபாய் பணத்தை கவனக்குறைவாக விட்டுச் சென்றனர். பணப்பையை பார்த்த உணவக ஊழியர் ரவி, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஒரு நாள் வரை அந்த பையை தன் வசம் வைத்திருந்த மேலாளர், யாரும் பணத்தைத் தேடி வராததால்  அதை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரியவர் தகுந்த ஆதாரத்தைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பணப்பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த உணவக ஊழியர் ரவியை நேரில் அழைத்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்