செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிராம் பகுதியில் டாடா வாகனம் மீது ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 4 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.