மும்பை:
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது ரூ 1.5 கோடி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது ஆபாசப் பட வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய ராஜ் குந்த்ரா மற்றும் சில்பா செட்டி அதில் முதலீடு செய்யுமாறு தன்னிடம் ரூபாய் 1.51 கோடி பணம் கேட்டதாக மும்பை காவல்துறையிடம் நிதின் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஷில்ப ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்
பணத்தைத் திருப்பி தராமல் நிதினை மிரட்டியதாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து காவல்துறை மேலும் விசாரணை செய்து வருகின்றனர்