புதுடெல்லி

சிபிஎஸ்இ கல்வி இயக்குநர் வரும் கவ்வி ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

நேற்று சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் செய்தியாளர்களிடம்.

”வரும் 2024-25ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் சார்ந்த கேள்விகள் இடம் பெறும். அதன்படி பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகள், ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வினா கேள்விகள் 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.  குறுகிய மற்றும் நீண்ட கேள்விகளின் சதவீதம் 40ல் இருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்த உள்ளது.  வாரியத்தின் முக்கிய நடவடிக்கை மனப்பாடம் செய்வதிலிருந்து விலகிச் செல்லும் கல்விச் சூழலை உருவாக்குவதே ஆகும். 

இதையொட்டி  வரும் 2024-2025 கல்வி அமர்வுக்கான மதிப்பீடுகள் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை புதிய கல்வி கொள்கையுடன் சீரமைப்பதை வாரியம் தொடர்கிறது. ஆகவே வரும் கல்வி ஆண்டு முதல் வினாத்தாள்களில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் அடிப்படையிலான கேள்விகளின் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது” 

என்று தெரிவித்துள்ளார்.