டில்லி

நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ’இஸ்ரோ’ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ’சந்திரயான்-3′ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது.

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அவ்வப்போது அதன் சுற்றுப்பாதை தொலைவு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சுற்று வட்டப்பாதை உயரம் ஏற்கனவே 3 முறை குறைக்கப்பட்டது.  தற்போது 153 * 163 கி.மீ. ஆக நிலவின் சுற்று வட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. நாளை சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் நாளை பிரிக்கப்படு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.