டில்லி

னது கைதை எதிர்த்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கை டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16 ஆம் தேதி டில்லி நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர் . கவிதாவை வரும் 23 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க  நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவிட்டார்.

இன்று டில்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.