புதுடெல்லி:
ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து அடுத்த தலைமைநீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை தலைமை நீதிபதி யுயு லலித் மத்தியஅரசுக்கு பரிந்துரைத்தார். அதை ஏற்று தற்போது குடியரசு தலைவர் நாட்டின் 50-ஆவது தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமனம் செய்து அறிவித்து உள்ளார்.

அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் சந்திரசூட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9, 2022 அன்று இந்தியாவின் தலைமை நீதிபதியாகி, நவம்பர் 10, 2024 வரை பதவியில் இருப்பார். அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த 7 நீதிபதிகள் (நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உட்பட) பணியில் இருந்து ஓய்வு பெறுவார்கள்.

2024ல் நீதிபதி சஞ்சீவ் கண்ணா (இப்போது எண்.10) மட்டுமே தலைமை நீதிபதியாக முடியும். தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா இந்தியா தனது முதல் பெண் தலைமை நீதிபதியாக செப்டம்பர் 24, 2027 அன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், அக்டோபர் 29, 2027 அன்று ஓய்வு பெற்ற பிறகு, நீதிபதி பமிடிகண்டம் ஸ்ரீ நரசிம்ஹா மே 2, 2028 வரை தலைமை நீதிபதியாக இருப்பார். அதன்பிறகு, நீதிபதி ஜே.பி. பார்திவாலா தலைமை நீதிபதியாக . ஆகஸ்ட் 11, 2030 வரை இருப்பார்.