ராஜமுந்திரி
ப்ன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமக்குச் சிறையிலும் தமது குடும்பத்தாருக்கு வெளியிலும் உயிர் ஆபத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில்,
“சிறையில் உள்ள எனக்கும், வெளியில் இருக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. ஆகவே ராஜமுந்திரி மத்திய சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.”
என்று தெரிவித்துள்ளார்.