விஜயவாடா

ந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கும் விழாவில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கவில்லை என தெரிய வந்துள்ளது.

நாளை விஜயவாடா நகரில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.

இன்று தெலுக்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒரு சிலர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத்துக்கு சென்று அவருக்கு பதவி ஏற்பு விழாவுக்கு முன்பே வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியினர், “ஜெகன்மோகன் ரெட்டியின் பதவி ஏற்பு விழா ராஜ்பவனில் நடைபெறாமல் பொது இடத்தில் நடப்பதால் அதில் பங்கேறது உசிதமாக இருக்காது. ஆகவே தெலுங்கு தேசம் கட்சியின் சில தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து கட்சியின் வாழ்த்துக்களையும் சந்திரபாபு நாயுடுவின் வாழ்த்துக்கலையும் தெரிவிக்க உள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.