சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது என்றாலும் சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தைத் தணித்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்து உள்ளது.

அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.