சென்னை:
மிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உள் பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை வரை, மிக கன மழை பெய்யும். நாளை கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.