சென்னை:
மிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழ்டுக்குச் சுழற்சி மற்றும் வேப்பசலனம் காரணமாக தமிழகத்தின், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் , நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.