மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுவரை 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஜூலை 1 முதல் இந்த புதிய அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் நவம்பர் மாதம் சம்பள உயர்வுடன் மூன்று மாத நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவார்கள்.