பாரூச்

த்திய அமைச்சர் நிதின் கட்கரி தந்து யூடியுப் சேனல் மூலம் மாதம் 4 லட்சம் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.

 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் சேனல் தொடங்கினார். அவருடைய உரைகள், பேட்டிகள் போன்றவற்றை அந்தச் சேனலில் பதிவேற்றி வருகிறார். தற்போது அவரது சேனலை 2.12 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பாரூச் நகரில் டெல்லி –மும்பை எக்ஸ்பிரஸ்வே திட்டப்பணிகள் குறித்த ஆய்வை நிதின் கட்கரி நேற்று முன்தினம் மேற்கொண்டார். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் புதிய சாலைப் பணிகள் குறித்தும், கொரோனா கால அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

கொரோனா காலத்தில் அவருடைய அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில் “இந்த கரோனா காலகட்டத்தில் இரண்டு வேலைகள் செய்தேன். சமையல் கலைஞராக மாறி வீட்டில் சமையல் வேலைகள் செய்தேன். மேலும் இணையவழியாக பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று உரைகள் நிகழ்த்தினேன்.

நான் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இணைய வழி விரிவுரை வழங்கி இருக்கிறேன். இதுவரை 950 உரைகள் நிகழ்த்தியிருக்கிறேன். எனது உரைகளை எல்லாம் என்னுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளேன்.  கொரோனா காலகட்டத்தில் என்னுடைய சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் என்னுடைய யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வருமானம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.