புதுடெல்லி:
ந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுவது தேசத்துரோகம் அல்ல என்று முன்னாள் நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இதுபோன்ற செயல்கள் சிலரைப் புண்படுத்தும் வகையில் இருக்கலாம். எனினும், அது ஒரு குற்றம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

பல்வந்த் சிங் & அன்ரவ் வழக்கைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி குப்தா, பஞ்சாப் மாநிலம், எங்கே காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிடுவது தேசத் துரோகம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய ஆக்ராவில் உள்ள காஷ்மீரி மாணவர் தேசத்துரோக குற்றச்சாட்டு- “நிச்சயமாக நாட்டின் சட்டத்திற்கு எதிரானது” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.