புதுடெல்லி: 
சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற நிறுவன  பெகாசஸ் என்ற உளவு செயலி மூலமாக  ஒட்டுக்கேட்கப்பட்ட சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைப்பேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரீஸைச் சேர்ந்த பார்பிடன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து  ஊடகங்கள்  சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன.
இந்த விசாரணையில்  அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கைப்பேசி எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு  அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது கைப்பேசி எண்களும் பட்டியலில் உள்ளன இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் அடக்கம். சமூக ஆர்வலர்கள் எண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அதன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த எண்கள் வேவு பார்க்கப்பட்டவையா என்பதை உறுதிப் படுத்த ஆய்வு தொடர்வதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் நோக்கிலேயே மென்பொருள் விற்பனை என இஸ்ரேல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த விசாரணை அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.இந்தியா உறுதியான ஜனநாயக நாடு என்றும் அனைத்து குடிமக்களின் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதே போன்று பெகாசஸ் செயலியை இந்தியாவுக்கு விற்பனை செய்த நிறுவனமும் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது. தவறான புகார்களைத் தெரிவிப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பெகாசஸ் செயலியை சந்தைப்படுத்தும் இஸ்ரேலின் என்.எஸ். ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் ஆஜராக வேண்டும் என்று மும்பை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால், மகாராஷ்டிரா டிஜிபிஅயக இருந்த போது ஒட்டுக்கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.