புதுடெல்லி

திகார் சிறையில் உள்ள சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு மதுபான உரிமம் பெற 100 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாகச் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. கடந்த மாதம் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட கவிதா. தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ திகார் சிறையில் இருக்கும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் .அனுமதி கேட்டதன் பேரில் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் கே.கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சி பாபுவின் தொலைப்பேசியில் இருந்து நிலம் தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

இன்று திகார் சிறையில் இருக்கும் கே.கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்துக்கு  சி.பி.ஐ. விசாரணை குறித்து கே.கவிதா எழுதியுள்ள கடிததத்தில்

“சி.பி.ஐ.,யின் விசாரணை ஊடக விசாரணை. அது என்னுடைய நற்பெயரைப் பாதிப்பதாகவும், தனியுரிமையை மீறுவதாகவும் உள்ளது. நான் பாதிக்கப்பட்டவர். என்னுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறி வைக்கப்படுகிறது. என்னுடைய தொலைப்பேசி அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. 

இது என்னுடைய தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும். நான் ஏஜென்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் கொடுத்துள்ளேன். நான் அழித்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறும் அனைத்து தொலைப்பேசிகளையும் ஒப்படைப்பேன்.” 

என்று தெரிவித்துள்ளார்.