டில்லி

ர்நாடக அரசு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்ற போது 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் 31 ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரைக் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இவ்வாறு ஒழுங்காற்றுக்குழு விடுத்த பரிந்துரையைக் கர்நாடகா செயல்படுத்தத் தயக்கம் காட்டி உள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை அவசரமாகக் கூட்ட, ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் நேற்று முடிவு எடுத்து அறிவித்தார். இன்று பிற்பகல் 2 மணிக்கு டில்லியில் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த  கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார்.

பிறகு, வருகிற 16 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்குத் தமிழகத்திற்குக் காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவினை கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்து உள்ளது.