சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும் என கண்அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்களில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கண்அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. டாக்டர். அகர்வால் கண் மருத்துவ குழுமத் தலைவருமான அமர் அகர்வால் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கில், அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் அறிவியல் குழு தலைவர் லலித்வர்மா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறை டாக்டர் நர்மதா ஷர்மா, , ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மோகன்ராஜன், அறிவியல் குழுத் தலைவர் மஹிபால் எஸ்.சச்தேவ், மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கருத்தரங்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்ரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் கண் பாதிப்புகள் அதிகரித்து வருகிறத,  பார்வை திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை யில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலைக்குரியது என்றுவர், இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே  கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால்பார்வை இழப்புகளை தடுக்க முடியும் என்றார்.

தொடர்ந்து பேசியவர் கண்புரை பரிசோதனை, தமிழகஅரசு செயல்படுத்தி வரும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இந்த ஆண்டில் இதுவரை வருமுன் காப்போம் திட்டத்தில் 460 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இனி நடைபெறும் முகாம்களில் ஏழைகள் பயன்பெறும் வகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும். கண்புரை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு, கண் மருத்துவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.